காலை 1100 மணி , எனது அறையிலிருந்து பனிக்கு செல்வதற்க்காக பார்ஜினுடைய தளத்திற்கு செல்ல கதவை திறந்தவுடன் பெருத்த மழையையே காண முடிந்தது. எனது மனதில் தோன்றியது.
பவுலின் பிரிவிற்க்காக
மேகமும் கண்ணீர் விட்டு கதருகிறதோ?
26/09/08, நான் பார்ஜிர்க்கு வந்தபோது எனது துறைக்கான அலுவலகத்தில் ஆறுதலுக்குக்கூட ஒரு இந்தியரும் இல்லை. ஆழ் கடல் கட்டுமானம் தொடர்பான பணிகளில் முதல் முறையாக ஈடுபடுவதால் இங்குள்ள தொழில்நுட்பமும் எனக்கு அறிமுகம் இல்லாத நிலை. இப்படியொரு தனிமையான சூழலில் அறிவுரை பெறுவதற்க்கு அறிமுகம் இல்லாமல் தவித்துக்கொண்டிருந்தபோதுதான் பவுல் பார்ஜில் பணிக்கு வந்து சேர்ந்தார். ஐந்தாண்டுகளுக்கு மேலாக எங்களது நிறுவனத்தில் பவுல் பணியாற்றி வருகிறார். அவர் தரக்கட்டுப்பாட்டுத்துரையில் கண்காணிப்பாளர் பதவியில் இருப்பதனால் அவருக்கு கூடுதல் அதிகாரங்கள் உள்ளது. நான் அதே துறையில் ஆய்வாளராக பணியாற்றுவதனால் எனது பணிக்கான அறிவுரைகளும், கட்டளைகளும் அவரிடமிருந்தே பெறப்படும். பவுல் அப்படியொரு பொறுப்பில் இருந்தாலும் எங்களது உறவு ஒரு கண்காணிப்பாளருக்கும் ஆய்வாளருக்கும் உள்ள உறவு போலல்லாமல், உற்ற நண்பர்களாகவே பழகினோம். பார்ஜில் பணி இல்லாத நேரங்களில், அலுவலகத்தில் இருக்கும்போது பகுதி நேரத்திற்க்கும் மேலாக பொதுவான விஷயங்களையே உரையாடிக்கொண்டிருப்போம்.
விரும்பினாலும் விரும்பாவிடினும் அவருக்கு தமிழ் தெரிந்த காரணத்தினால் எனது எழுத்துக்களின் முதல் விமர்சகர் பவுளின்றி வேறெவரும் இல்லை. அவருக்கு தமிழ், பேச மட்டுமே தெரிந்த காரணத்தினால் நான் எனது படைப்புகளைக்கூற அவர் ரசிப்பதுண்டு. அவரது முகபாவங்களை வைத்து அவர் ரசிப்பதாகவே நான் நம்பிக்கொண்டிருக்கிறேன். ஆனால் அவரை மைய்யப்படுத்தி எழுதிய இந்த கட்டுரையை செவி சாய்ப்பதற்கு அவர் நாடு திரும்பியிருக்கக்கூடும். ஆலைக்கட்டுமானம் மற்றும் குழாய் அமைப்புப்பணிகளில் இது போன்ற பிரிவுகள் பொதுவானதே. மீண்டும் வேறு ஏதாவது ஒரு நாட்டிலோ அல்லது வேறு ஏதாவது ஒரு திட்டப்பணியிலோ சந்திக்கும் வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே நாங்கள் பிரிவுகளை சந்திக்கிறோம்.
ஜம்ஷீது,
காங்கோ,
11/11/08.

No comments:
Post a Comment